நெசவாளர்கள் மீது வழக்கு
ஆண்டிபட்டி: மதுரை கைத்தறி உற்பத்தி ரக ஒதுக்கீடு உதவி அமலாக்க அலுவலர் கவிதா மற்றும் துணி நூல் துறை அலுவலர்கள் டி. சுப்புலாபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
டி.சுப்புலாபுரம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த முத்துகுமார் 51, அன்னை சத்யா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் 57, ஆகியோர் கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய காட்டன் சேலையை விசைத்தறியில் கூடுதல் பாவு இழைகளுடன் நெசவு செய்வது தெரிய வந்தது. இதுகுறித்து கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் இரு நெசவாளர்கள் மீதும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.