Wednesday, April 16, 2025
தமிழக செய்திகள்

வானிலை ‘அப்டேட்’

2 நாட்களுக்கு 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் (ஏப்ரல் 03), நாளையும் (ஏப்ரல் 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, விருதுநகர், குமரி, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், துாத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 5ம் தேதி, கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *