மலர் கண்காட்சி மே 1 – 10 வரை நடக்குது
மூணாறில் மாவட்ட சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மே 1 முதல் 10 வரை நடக்கிறது.
கேரளாவில் தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறுக்கு கோடை சுற்றுலா சீசனில் வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு மாவட்ட சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மே 1 முதல் 10 வரை நடக்கிறது.
பூங்காவில் வெளி நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வகை பூக்கள் உள்ளிட்ட 1500 வகை வண்ண பூக்கள் உள்ளன. தவிர பூங்கா முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள அணில், வரையாடு, யானை, காட்டு மாடு, மான்கள் ஆகியவற்றின் உருவங்கள், மியூசிக்கல் மவுண்டன், ‘செல்பி பாய்ன்ட்’ கள் ஆகியவையும் உள்ளன. மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை பூங்காவை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50. கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து மலர் கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அதனை ஆண்டு தோறும் சராசரி ஒரு லட்சம் பயணிகள் பார்த்து ரசித்தனர். இந்தாண்டு பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேவிகுளம் எல்.எல்.ஏ., ராஜா தெரிவித்தார்.