Thursday, May 8, 2025
மாவட்ட செய்திகள்

அக்னி நட்சத்திரத்தில் பெய்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

அக்னி நட்சத்திரம் நடந்து வரும் நிலையில் கோடை மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரியகுளம் பகுதியில் சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் தாக்கத்தால், இரவு நேரங்களில் புழுக்கத்தால் பொது மக்கள் சிரமப்பட்டனர்.

வெயில் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. தலையில் தொப்பி, குடை பிடித்து வெளியே வரும் நிலை இருந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கிய வெயில் மதியம் 3:00 வரை நீடித்தது. மாலை 4:00 மணிக்கு சாராலாக வந்த மழை 10 நிமிடத்தில் கனமழையாக மாறி, பெய்தது. இதனால் குளிர்ந்தகாற்று வீசி, வெப்பம் தணிந்தது.

இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *