பூக்கடையில் புகையிலை விற்ற பெண் கைது
தேனி போலீஸ் எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் ரோந்து சென்றனர். அங்கு கிழக்குப்பகுதியில் பூக்கடை உள்ளது. இதனை உப்புக்கோட்டை யூனியன் பள்ளி கிழக்குத்தெரு அஞ்சலி 28, நடத்தி வந்தார். புகையிலை பாக்கெட்டுகளை பூக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார், புகையிலைப் பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.