Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

போடியில் பெண்கள் அச்சம்: குடிமகன்கள் தொல்லை

போடி: போடி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வினோபாஜி காலனி செல்லும் ரோடு வரை குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருவதால் பெண்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.

போடி பழைய பஸ்ஸ்டாண்ட், கருப்பசாமி கோயில் தெரு, வினோபாஜி காலனி செல்லும் ரோட்டில் கோயில், பள்ளி கல்லூரிக்கு செல்லும் முக்கிய பாதையாக உள்ளது.போடி மெயின் ரோடான காமராஜ் பஜார், பி.ஹைச்., ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு, வினோபாஜி காலனி செல்லும் ரோட்டில் டாஸ்மாக், மதுபார்கள் உள்ளன. காலை முதல் இரவு வரை மதுப்பியர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. காமராஜ் பஜார், பழைய பஸ்ஸ்டாண்ட் பாலம் அருகிலும், வினோபாஜி காலனி செல்லும் ரோட்டிலும் இரவு 7 மணிக்கு மேல் மது குடித்து விட்டு போதையில் கூட்டமாக நின்று கொண்டும், டூவீலர்களை வேகமாகவும் ஓட்டி செல்கின்றனர். சிலர் பள்ளி, டியூஷன், வேலைக்கு சென்று திரும்பும் பெண்களை கேலி செய்வதும், தொடர்ந்து பின் செல்வதும் அதிகரித்துள்ளது. இதனால் இரவில் பெண்கள் பழைய பஸ்ஸ்டாண்ட், வினோபாஜி காலனி செல்லும் ரோட்டில் நடந்து செல்ல அச்சம் அடைகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் மதுப்பிரியர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *