அவசர சிகிச்சை பிரிவு சின்னமனுா ர் அரசு மருத்துவமனையில் துவக்க வேண்டும்
சின்னமனூர்: சின்னமனூர் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டட பணிகள் துவக்க பொதுமககள் வலியுறுத்தி உள்ளனர்.
சின்னமனூர் நகராட்சியை சுற்றி 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேகமலை கிராமங்களும் சின்னமனுார் அரசு மருத்துவமனையை நம்பி உள்ளது. ஆனால் இங்கு போதிய படுக்கைகள் இன்றி இரட்டை இலக்கத்தில் உள்ளது. போதிய டாக்டர்களும் இல்லை. பிரசவங்கள் நடைபெறுவது இல்லை. இம் மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், தினமும் விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்கென கொண்டு வரப்படுகின்றனர். இங்கு விபத்து அவசர சிகிச்சை பிரிவு தனியாக இல்லை.
இந்நிலையில் 15 வது நிதிக்குழு மானியம், மத்திய சுகாதார இயக்கத்தின சார்பில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு அமைக்க ரூ.3.50 கோடி அனுமதித்துள்ளது.
அதற்கான மதிப்பீடு தயார் செய்ய சின்னமனூர் நகராட்சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் இதுவரை அது தொடர்பான பணிகள் துவங்கவில்லை.
நகராட்சி மதிப்பீடுகளும் தயார் செய்யவில்லை. விபத்து அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வக வசதி உள்ளிட்ட பல வசதிகள் கொண்ட கட்டடத்தை விரைந்து கட்ட நலப்பணிகள் இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.