முல்லை பெரியாறு நீர்மட்டம் 2 நாட்களில் 8 அடி உயர்வு
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பில் நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 5.42, தேக்கடியில் 10 செ.மீ., மழை பதிவானது
இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 652 கன அடியாக அதிகரித்தது. ஆனால் நேற்று பகல் சற்று மழை குறைந்ததால் மாலை 4:00 மணிக்கு நீர்வரத்து 4400 கன அடியாக குறைந்தது.
அணை நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 8 அடி உயர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு 128.65 அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரம் 152 அடி. மழை தொடர்ந்தால் நீர்மட்டம் 130 அடியை கடக்கும் வாய்ப்புள்ளது. நீர் இருப்பு 4406 மில்லியன் கன அடியாகும்.
தமிழகப் பகுதிக்கு 1400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 126 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.