Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை நீர்மட்டம் மழையால் 130 அடியை எட்டியது

கூடலுார: தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டியது.

டிச.12ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக இருந்தது. டிச.13ல் அதிகபட்சமாக பெரியாறில் 101 மி.மீ., தேக்கடியில் 108.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியைத் தாண்டியது.

வெகுவாக நீர்மட்டம் உயர்ந்து நேற்று மாலை 130 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி).

தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4546 மில்லியன் கன அடியாகும்.

நேற்று மழை சற்று குறைந்ததால் நேற்று முன்தினம் 17 ஆயிரத்து 651 கன அடியாக இருந்த நீர்வரத்து 5531 கன அடியாக குறைந்தது. லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மூன்று ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *