Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கம்பத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் தலை மறைவு

தேனி : கம்பம் பகுதிகளில் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சுருளிப்பட்டி ஆற்றங்கரை பகுதியில் சென்ற போது அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததை கண்டனர்.

அந்த இடத்தில் 2 அடி உயரத்தில் 10 கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தன.

விசாரணையில் சுருளிப்பட்டி பாரஸ்ட் பங்களா ரோடு மனோஜ்குமார் 21, என்பவர் கஞ்சா செடிகளை பயிரிட்டது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *