கம்பத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் தலை மறைவு
தேனி : கம்பம் பகுதிகளில் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சுருளிப்பட்டி ஆற்றங்கரை பகுதியில் சென்ற போது அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததை கண்டனர்.
அந்த இடத்தில் 2 அடி உயரத்தில் 10 கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தன.
விசாரணையில் சுருளிப்பட்டி பாரஸ்ட் பங்களா ரோடு மனோஜ்குமார் 21, என்பவர் கஞ்சா செடிகளை பயிரிட்டது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.