Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

புகையிலை பறி முதல் ரூ. 35 ஆயிரம் அபராதம்

போடி: போடி பஸ்ஸ்டாண்ட், டாஸ்மாக், மதுபார், மீன் கடைகளை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மணிமாறன், சக்தீஸ்வரன்,நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன.

பி.ஹைச்., ரோடு, மீன் கடைகளில் கெட்டு போன 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.

பெரியாண்டவர் கோயில் ரோடு, பள்ளி அருகே பாஸ்ட்புட் கடைகளில் வைக்கப்பட்டு இருந்த சிப்ஸ், கலர் சாயம் பூசப்பட்ட, காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலச் சொக்கநாதபுரம் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர், பாலித்தீன் பைகள் 3 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *