அரசு கல்லுாரியில் என். எஸ்.எஸ்., முகாம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் ரங்கசமுத்திரம், கோவில்பட்டி ஆகிய கிராமங்களில் துவங்கியது. துவக்க விழாவில் கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார்.
என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் மணிமாறன், ஜெயக்குமார், ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்திப் பேசினர். ரெங்கசமுத்திரம் நேருஜி காலனியில் பொது மக்களுக்கு மாணவர்களுக்கும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் போடிதாசன்பட்டியில் நடந்த முகாமை முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி துவக்கி வைத்தார். என்.எஸ்., திட்ட அலுவலர் கணேசன் வரவேற்றார். ஆண்டிபட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமரன், போக்குவரத்து அலுவலர் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, முதலுதவி கருத்துக்களை கூறினர். கம்ப்யூட்டர் ஆசிரியர் மாறன் நன்றி கூறினார். மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் மாணவர்கள் துாய்மைப்பணி, பாலிதீன், பிளாஸ்டிக் ஒழிப்புப் பணிகள் மேற்கொண்டனர்.