Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சுற்றுலா வந்த சிறுவன் பலி

மூணாறு: மத்தியபிரதேசத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் கேரளமாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.

இவர்கள் சித்திராபுரத்தில் தனியார் விடுதியில் தங்கினர். 9 வயது சிறுவன் பிராக்ய பலால் விடுதியின் ஆறாவது மாடியில் அறையில் பெற்றோருடன் தங்கினார்.

நேற்று முன்தினம் இரவு நாற்காலி மீதுஏறி ஜன்னலை திறக்க முயன்ற சிறுவன் , எதிர்பாராத வகையில் அதன் வழியாக கீழே விழுந்தான். பலத்த காயமடைந்த பிராக்ய பலால், அங்கமாலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தான்.

இயற்கைக்கு மாறான மரணம் என வெள்ளத்துாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *