Wednesday, September 10, 2025
மாவட்ட செய்திகள்

வாழையை காக்க ஆலோசனை

ஆண்டிபட்டி, ஜன.23: வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: வாழைப்பயிரில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டால் பயிரை வேர்ப்பகுதி தவிர அனைத்தையும் அழித்துவிட வேண்டும். அவ்விடத்தில் 2கி.கி சுண்ணாம்புத்தூள் போட வேண்டும். வேர்ப்பகுதியில் துளையிட்டு 60மி.கி கார்பன்டசிம் மருந்து நிரப்பப்பட்ட காப்சூல் குப்பியை உள்ளே செலுத்த வேண்டும்.

அல்லது 20மி.கி சூடடோமோனஸ் என்ற உயிரியல் காரணியை மேற்குறிப்பிட்ட முறையில் செலுத்த வேண்டும். சிக்கடோக்கோ இலைப்புள்ளி நோய்க்கு போர்டோ கலவை அல்லது கார்பன்டசிம் 1லி நீரில் 1கிராம் வீதம் கலந்து இலைகள் நன்கு நனையும் வகையில் தெளிக்க வேண்டும். அசுவினி தாக்குதலுக்கு 1லி நீரில் 2மி.லி மிதைல் டெமட்டான் அல்லது மோனோக்குரோடாபாஸ் லிட்டருக்கு 1மி.லி என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *