Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்

தேனி, ஜன.30: மொபைல் போனுக்கு வரும் மெசேஜ், லிங்க் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழப்பதாக தொடர்ந்து புகார் வருவதால் சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து போலீசார் கூறுகையில், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும். வங்கி ஏடிஎம் குறித்த விபரங்கள் கேட்டால், அது குறித்து நேரடியாக வங்கிக்கு சென்று தெரியப்படுத்துகிறோம் என போனை துண்டிக்க வேண்டும்.

மேலும் வங்கியில் இருந்து எந்த விபரமும் கேட்கப்படுவதில்லை என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. போனுக்கு மெசேஜ் மூலம் வரும் தேவையற்ற லிங்க்களை திறக்கக்கூடாது. இது போன்ற மோசடிகளை கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பொதுமக்கள் அனைத்து ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *