வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச.18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முறைப்பாசனம் நடைமுறையில் இருப்பதால் அணையில் திறக்கப்பட்ட நீர் பிப். 6ல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம், கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக பிப். 6 முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியாக செல்கிறது.
இந்நிலையில் முறைப்பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் கால்வாய் வழியாக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 64.70 அடி (மொத்த உயரம் 71 அடி). மதுரை, தேனி, ஆண்டிபட்டி ————— சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் செல்கிறது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து வெளியேறும் நீரின் மொத்த அளவு வினாடிக்கு 819 கன அடியாக உயர்ந்துள்ளது.