Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

போடி இன்ஜி., மாணவர் இறப்பு சி.பி.சி.ஐ.டி , விசாரிக்க கோரி தர்ணா

தேனி : போடி அரசு இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கோரி பெற்றோர்கள் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், அண்ணாநகர் விக்னேஷ் 21, இவர் போடி அரசு இன்ஜிரியரிங் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் உடலில் காயங்களுடன் கழிவறையில் இறந்து கிடந்தார். மாணவரின் பெற்றோர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் மாணவரின் பெற்றோர் செல்வம், கிருஷ்ணம்மாள், சகோதரர் வெங்கடேஷ், உறவினர்கள், சில அமைப்பினர் இணைந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். மனுவில் விக்னேஷ் இறப்பு வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க கோரினர்.

பெரியகுளம் தாலுகா, சருத்துப்பட்டி இந்திரா காலனி வடிவேல் தலைமையில் கிராமத்தினர் ,’ஜல்லிபட்டியில் பெத்தணசாமி கோயில் திருவிழா தொடர்பான பிரச்னை தீர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிலரை மட்டும் கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவனிடம் மனு அளிக்க அனுமதித்தனர். பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் பிப்.,17 ல் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நேர்முக உதவியாளர் தெரிவித்தார். அதன்பின் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *