Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

காரை மறித்து செல்போன் பறிப்பு 3 பேர் கைது

வேடசந்தூர், மார்ச் 27: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (28). இவர் கடந்த மார்ச் 23ம் தேதி தனது காரில் வேடசந்தூர் வந்துவிட்டு மீண்டும் தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். நவாமரத்துப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் டூவீலரில் வந்த 3 வாலிபர்கள் காரை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் சாந்தகுமாரை காரில் இருந்து இறக்கி அவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

இதுகுறித்து சாந்தகுமார் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்களை பிடிக்க டிஎஸ்பி பவித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் 3 பேரும் ஆத்துமேடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று 3 பேரையும் பிடித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வேடசந்தூரை சேர்ந்த தீபக் குமார் (22), சரவணக்குமார் (26), ராகேஷ் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *