விவசாயியை மிரட்டியவர்கள் மீது வழக்கு
தேவதானப்பட்டி, பிப். 18: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி முத்தாலம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் காந்தி(76). விவசாயியான இவரது தென்னந்தோப்பில் ஜி.கல்லுப்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த வீரக்குமார், வத்தலக்குண்டுவைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் தேங்காய் திருடியுள்ளனர். இது குறித்து காந்தி தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் புகார் கொடுத்துவிட்டு ஜி.கல்லுப்பட்டி பேட்டை அருகே நின்று கொண்டிருந்த காந்தியை தேங்காய் திருடிய இருவரும் சேர்ந்து தகராறு செய்து, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து காந்தி தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வீரக்குமார், பார்த்திபன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.