Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மார்ச் 1ல் வேலை வாய்ப்பு முகாம்

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 1ல் பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.

இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில் 8 ம் வகுப்பிற்கு மேல் கல்வித் தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம்.

பங்கேற்கும் வேலை நாடுநர்கள் சுய விபரக்குறிப்பு, கல்வி சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் நகலுடன் பங்கேற்க வேண்டும். பங்கேற்போர் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *