Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

ரூ.50 லட்சம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 5 பேர் மீது வழக்கு

பெரியகுளம் : லட்சுமிபுரத்தில் ரூ.50 லட்சம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அங்கன்வாடி அமைப்பாளர் வனிதா உட்பட இருதரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் வி.வி.ஜி., நகரைச் சேர்ந்த ஜானகிராமன் மனைவி சரண்யா 35. இவரது சித்தி தேனி பாரஸ்ட் ரோடு நாராயணசாமி மனைவி வனிதா, அங்கன்வாடி அமைப்பாளர். இவரது மகள் ருத்ரா. கணவர் பாலமுருகனிடம் ரூ.50 லட்சத்தை, ஜானகிராமன் கடன் பெற்றுள்ளார். இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் ஜானகிராமன் பணம் கொடுக்க தாமதமானது. இதனால் வனிதா, ருத்ரா இருவரும் சரண்யாவிடம் பணம் கேட்டு அவதூறாக பேசி தாக்கினர். சரண்யா புகாரில் தென்கரை போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ருத்ரா புகாரில், என்னிடம் ஜானகிராமன் வாங்கிய ரூ.50 லட்சத்தை கேட்க சென்றபோது, சரண்யா, அவரது தந்தை அந்தோனி ராஜ். கணவர் ஜானகிராமன் ஆகியோர் அவதூறாக பேசி என்னை அடித்தனர் என தெரிவித்தார். தென்கரை போலீசார் சரண்யா உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *