ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி, மார்ச் 12: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டியும், 70 வயது நிரம்பிய ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.