பெரியகுளம் ஆதார் மையம் ஏப்.6ல் செயல்படும்
மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புதிய பதிவுகள், திருத்தம், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஏதாவது ஒரு தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.
அதன்படி ஏப்.,6ல் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நிரந்த ஆதார் மையம் செயல்படும். பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.