அலங்கார மீன்கள் வளர்க்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
மாவட்டத்தில் மீன் வளர்ச்சித்துறை சார்பில் மத்திய அரசின் பிரதமர் மீன் வள மேம்பாட்டு திட்டத்தில் அலங்கார மீன்கள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம், பெண்கள், ஆதிதிராவிடர்களுக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் வைகை அணை பகுதியில் பூங்கா ரோட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மீன்வளத்துறை ஆய்வாளரை 87781 91094 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.